Friday, January 1, 2010

வலையுலகப் படைப்பாளிகள்

எழுத்துலகில் இது தலைமுறை மாற்றத்திற்கான தருணம். பத்திரிகைகளுக்கு படைப்புகளை அனுப்பி விட்டு , அது பிரசுரமாகும் நாளுக்காகக் காத்திருக்கும் தலைமுறையின் காலம் கடந்து போய்க் கொண்டிருக்கிறது. பெரிய பத்திரிகையில் படைப்புகள் பிரசுரமாகின்றன என்பது படைப்பாளிக்குப் பெருமைதான். ஆனால் அது நடக்காவிட்டால் , அந்தப் படைப்புகள் குப்பைக்கூடைக்குத்தான் போக வேண்டும் என்று இன்றையத் தலைமுறை எண்ணிக் கொண்டிருக்க வில்லை.

இந்தக்கால இளைஞர்கள் எதை வேண்டுமானாலும் எழுதுகிறார்கள். சொல்ல வந்ததைத் தைரியமாகச் சொல்கிறார்கள். பிறரிடம் கருத்துக் கேட்கிறார்கள். விரிவான வாசகர் வட்டத்தையும் உருவாக்கிக் கொள்கிறார்கள். கட்டற்ற விடுதலை உணர்வு அவர்களிடமிருந்து வெளிப்படுகிறது. இவற்றை எல்லாம் சாத்தியமாக்க அவர்களுக்கு உதவி இருப்பது இணையம்.

உலகளாவிய வலை, மின்னஞ்சல் போன்ற நிலைகளைத் தாண்டி வேறொரு பரந்த வெளியில் இணையம் பயனிக்கத் தொடங்கி சில ஆண்டுகளாகி விட்டன. இந்தத் தலைமுறையினர் ஃபேஸ்புக்கையும் ட்விட்டரையும் தெரியாதவர்களை படிப்பறிவில்லாதவர்கள் எனச் சீண்டுகிறார்கள். வலைப்பூ இல்லா விட்டால் முகவரி இல்லாதவர்களைப் போலப் பார்க்கிறார்கள்.

தமிழைப் பொறுத்த வரை, வலைப்பூக்கள் தான் கருத்துகளைச் சொல்லும் படைப்புகளை வெளியிடும் தளங்களாக இருக்கின்றன. இதைப் படைப்பவர்களைப் பதிவர்கள் என்கிறார்கள். பொறியியல் வல்லுனர்கள் எழுதும் கவிதைகளையும், குடும்பத் தலைவிகள் செய்யும் நையாண்டிகளையும், இலக்கியவாதிகள் எழுதும் சினிமா விமர்சனங்களயும் வலைப்பூக்கள் நம்க்கு அறிமுகம் செய்கின்றன. ஒவ்வொருவரும் தமது துறை தாண்டிய படைப்புகளை இங்கு வெளியிட முடிகிறது. யாரும் முழுமையாக அடையாளப் படுத்திக் கொள்ள வேண்டியதில்லை என்பதால், துணிச்சலான, வித்தியாசமான பலதரப்பட்ட கருத்துகள் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் எந்தக் கொள்கைகுள்ளும் முடங்கிப் போகாத ஊடகங்களாவே இந்த வலைப்பூக்கள் கவனிக்கப்படுகின்றன. அரசியல் வாதிகள், சினிமாக்காரர்கள், வேறு வகையில் புகழ் பெற்றவர்கள் எல்லாம் வலைப்பூக்களை மேய்ந்தால், தங்களைப் பற்றிய உண்மையான் விமர்சனத்தைத் தெரிந்து கொள்ள முடியும் என்றே சொல்லலாம். நாடு, இனம் மதங்களைக் கடந்த நட்பு வட்டத்தினை உருவாக்கிக் கொள்வதற்கும் வலைப்பூக்கள் வாய்ப்புகளை வழங்கி இருக்கின்றன. வாசகர் வட்டங்களைப் போலவே பதிவர் வட்டங்களும் கூட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பதிவர்கள் அவ்வப்போது கூட்டங்கள் நடத்தி தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதுடன் வலைப்பூக்களில் வெளியிடவும் செய்கின்றனர்.

நர்சிம், பரிச்லகாரன், வால்பையன், கேபிள் சங்கர், பழமைபேசி, பைத்தியக்காரன், அனுஜன்யா, அபி அப்பா, கார்க்கி, அகல்விளக்கு, க.பாலாசி, நசரேயன் , நேசமித்திரன், அமிர்தவர்ஷினி அம்மா, சோம்பேறி என வித்தியாசமான புனைப்பெயர்களுடன் பதிவிடும் வலைப்பதிவர்கள் நிறைய எழுதுவதுடன் பரந்து விரிந்த நட்பு வளையத்தையும் கொண்டிருக்கிறார்கள். நேரடியாக நட்புக் கொள்வதில் இருக்கும் சில சங்கடங்கள் இல்லை என்பதை இந்த நட்பு வட்டத்தின் சிறப்பாகக் கருதலாம்.

வலைப்பூக்களில் பெண்களின் ஆதிக்கம் குறிப்பிடத் தகுந்த அளவுக்கு இருப்பது வரவேறகத் தகுந்த ஒன்று. வலைப்பதிவிடும் பெண்கள் பெரும்பாலும் கவிதை எழுதுகின்றனர் அல்லது சமையல் குறிப்புகள் வழங்குகின்றனர். வாழ்க்கை அனுபவங்கள், குடும்பப் பிரச்னைகள். அம்மாக்களுக்கான ஆலோசனைகள், திரைப்பட தொலைக்ட்சி விமர்சனங்கள், என இவர்களது எழுத்து வட்டம் கொஞ்சம் அடக்கமானதாகவும் பொறுப்புணர்வுடன் கூடியதாகவும் இருக்கிறது. சில பெண் படைப்பாளிகள் அரசியல் சமூகச் சிந்தனைகளையும் விதைக்கின்றனர். ஃப்ஹீமாஜஹான், நளாயினி, புதிய மாதவி, தமயந்தி, சாந்தி லட்சுமணன், கலகலப்ரியா, ராமலக்ஷ்மி, ரம்யா, கிருபாநந்தினி, மதுமிதா, தாரணி ப்ரியா, பெரியார் தமிழச்சி, மாதங்கி, விக்னேஷ்வரி, மழை ஷ்ரேயா போன்ற நூற்றுக்கணக்கானோர் ஆக்கப்பூர்வமான், அபூர்வமான் படைப்புகளை பதிவிடுகின்றனர். தமிழ் இலக்கியங்களையும் மரபு வழி தமிழ் ஆராய்ச்சிகளையும் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் சில வலைப்பூக்கள் செயல் படுகின்றன. மு.இளங்கோவன், இரா.குணசீலன், கல்பனா சேக்கிழார், எம்.ஏ.சுசீலா, நா.கணேசன். சுப்ரபாரதி மணியன், அழகிய சிங்கர் போன்றவர்கள் வலைப்பூக்களில் இலக்கியப்பணி செய்கின்றனர். கவிதைகள், இலக்கியக் கூடல்கள், புத்த்க வெளியீட்டு விழாக்கள் போன்றவை இவர்களின் வலைப்பூக்களை ஆக்கிரமித்திருக்கின்றன.

இன்னும் சிலர் தொழில் நுட்பம் தொடர்பான் தகவல்களையும் உதவிகளையும் தமிழில் தருகின்றனர். இது போன்ற முயற்சிக்கு வலைப்பதிவர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருக்கிறது. இவற்றுக்கிடையே ஜெயமோகன், பாமரன், மனுஷ்யபுத்திரன், எஸ்.ராமகிருஷணன், மாலன், ஞானி, சாரு நிவேதிதா போன்ற பிரபலங்கள் பலரும் வலைப்பூக்கள் வழியாக வாசகர்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒட்டு மொத்தமாகக் கூறுவதென்றால் வலைப்பூக்கள் ஊடகங்களின் முழுச் சுதந்திரம் கொண்ட நவீன பரிமானங்களாக உருவெடுத்திருக்கின்றன. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமாவை வெற்றி பெறச் செய்ததில் வலைப்பதிவர்களுக்கு பெரும் பங்கு உண்டு. வெளிநாடுகளில் சந்தைக்கு வரும் தயாரிப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வலைப்பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றிலிருந்து வலைப்பூக்களின் வீச்சை அறிந்து கொள்ள முடிகிறது.

இன்னும் சில காலம் போனால் மரபு வழி ஊடகங்களுக்கு இணையாக , வலைப்பூக்கள் மாதிரியான இணைய வழி ஊடகங்களுக்கும் செல்வாக்கு கிடைத்துவிடும். இதை மரபு வ்ழி ஊடகங்களுக்கான அச்சுறுத்தலாகக் கருத முடியாது. ஆயினும் ஊடகங்களின் பரிமானம் மாறிக்கொண்டிருப்பதைப் புரிந்து, வலைப்பதிவர்களுடன் சமநிலைப்படுத்திக் கொள்ள மரபுவழி ஊடகங்களும் தயார்கிக் கொண்டிருக்கின்றன.


புத்தாண்டின் முதல் நாள் அன்று வெளியான தினமணி பத்திரிகையில் வெளிவந்த - எம்.மணிகண்டன் எழுதிய கட்டுரை.

அனைவருக்கும் இனிய இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா



65 comments:

cheena (சீனா) said...

சோதனை மறுமொழி

கலகலப்ரியா said...

நன்றி சீனா..:)..

vasu balaji said...

பகிர்ந்தமைக்கு நன்றி சீனா சார்.

ப்ரியமுடன் வசந்த் said...

பகிர்வுக்கு நன்றி சீனா ஐயா

அப்போ 2016ல நம்ம ஆட்சிதான்னு சொல்லுங்க....

:))

சக்தி சக்திதாசன் said...

அன்பின் சீனா,

என்றும் போல இன்றும் பயனுள்ள ஆக்கத்தை மற்றவரின் பார்வைக்காக வைக்கும் பரந்த நோகத்தில் தங்கள் இட்ட இந்த இடுகையைப் பார்த்து மகிழ்ந்தேன்.

அன்புடன்
சக்தி

பிரபாகர் said...

நன்றிங்கய்யா! புத்தாண்டு வாழ்த்துக்கள்.

பிரபாகர்.

cheena (சீனா) said...

அன்பின் கலக்லப்ரியா

பாராட்டுகள் பத்திரிகையில் பெருமை பெற்றதற்கு

நல்வாழ்த்துகள்

cheena (சீனா) said...

அன்பின் பாலா

ஆம் பகிர வேண்டும் எனத் தோன்றியது

நல்வாழ்த்துகள் பாலா

cheena (சீனா) said...

அன்பின் வசந்த்

ஆட்சியப் பிடிச்சிடுவோம்

நல்வாழ்த்துகள்

cheena (சீனா) said...

அன்பின் சக்தி

அன்புடனில் எழுதுவது குறைந்து விட்டது. அங்கும் வருகிறேன் - பணிச்சுமையே காரணம்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சக்தி

நல்வாழ்த்துகள் சக்தி

cheena (சீனா) said...

அன்பின் பிரபாகர்


வருகைகும் வாழ்த்துக்கும் நன்றி

நல்வாழ்த்துகள்

குசும்பன் said...

தினமணியில் வந்த நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

கண்மணி/kanmani said...

சந்தோஷமான விஷயம்.

கோவி.கண்ணன் said...

வலைப்பக்கங்கள் பற்றிய உங்கள் எண்ணங்கள் சிறப்பு

//அனைவருக்கும் இனிய இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா
//

உங்களுக்கும் நல்வாழ்த்துகள் !

cheena (சீனா) said...

அன்பின் குசும்ப

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

நல்வாழ்த்துக்ள்

cheena (சீனா) said...

அன்பின் கன்மணி

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

நல்வாழ்த்துக்ள்

cheena (சீனா) said...

அன்பின் கோவி

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

நல்வாழ்த்துக்ள்

Anonymous said...

அய்யா பகிர்விற்கு நன்றி

cheena (சீனா) said...

அன்பின் வடகரை வேலன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

நல்வாழ்த்துகள்

Ganesan said...

பகிர்தலுக்கு பகிர்தல் நல்ல விசயம் தானே ஐயா.

புத்தாண்டு வாழ்த்துக்கள்

மங்களூர் சிவா said...

nice!

ஜோசப் பால்ராஜ் said...

பகிர்விற்கு நன்றி ஐயா.
நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

cheena (சீனா) said...

அன்பின் காவேரிகணேஷ்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

நல்வாழ்த்துகள்

cheena (சீனா) said...

அன்பின் சிவா

நீண்ட நாட்களுக்குப் பின் எழுதப்பட்ட இடுகைக்கு நீண்ட நாட்களுக்குப் பின் இணையத்திற்கு வந்த சிவாவின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

நல்வாழ்த்துகள் சிவா

cheena (சீனா) said...

அன்பின் ஜோசப்

வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஜோசப்

நல்வாழ்த்துகள் ஜோசப்

பரிசல்காரன் said...

பகிர்தலுக்கு நன்றி மேனேஜர் சார்!

நட்புடன் ஜமால் said...

அனைவருக்கும் வாழ்த்துகள்.

cheena (சீனா) said...

அன்பின் பரிசல்

வருகைக்கு நன்றி

cheena (சீனா) said...

அன்பின் ஜமால்

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

இரசிகை said...

appadiyaa vishayam...:)

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இரசிகை

லதானந்த் said...

பகிர்வுக்கு நன்றி சீனா தானா!

cheena (சீனா) said...

வருகைக்கு நன்றி லதான்ந்த்

Ahamed irshad said...

பகிர்வுக்கு நன்றி..

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

கமலேஷ் said...

நல்ல பகிர்வு...

cheena (சீனா) said...

அன்பின் கம்லேஷ்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

Gayathri said...

அருமையான பகிர்வு..காலம் மாறிக்கொண்டு வருகிரது என்பதை அழகாக சொல்லி இருகிறிர்கள்..நன்றி..உங்களை போன்ற பெரியோர்களின் ஆசி இபோதிய தலைமுறையினருக்கு அவசியம் தேவை..நன்றி அய்யா..

Jeyamaran said...

நன்றி சார் நானும் தெப்பகுளம் தான் எப்பொழுது சந்திக்கலாம் எனது
email id jeyamaran333@gmail.com mail me.............

cheena (சீனா) said...

அன்பின் காயத்ரி

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

thiyaa said...

பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தியாவின் பேனா

Anonymous said...

http://thanglishpayan.blogspot.com/

Anonymous said...

http://thanglishpayan.blogspot.com/

LDN Internal Team said...

படித்ததில் பிடித்தது என்பதைவிட 
''மனதில் தைத்தது'' போன்ற 
வார்த்தகளே நன்றாக இருக்கிறது, 
பலரும் படித்ததில் பிடித்தது என்றே 
எழுதுகிறார்கள் அதுவே சற்று 
வேறு விதமான தலைப்பாக இருந்தால்
இன்னும் கவருவதாக இருக்கும்
நீங்கள்வெளிப்படுத்தியவைகள்அனைத்தும்
அருமைவாழ்த்துகள்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நன்றாக இருந்தது. வலையுலகப் படைப்பாளிகளை வெளி உலகத்திற்கு அறியச் செய்தததிற்கு, நன்றி!!

அன்புடன்,

ஆர்.ஆர்.ஆர்.

cheena (சீனா) said...

அன்பின் ராமமூர்த்தி - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புட்ன் சீனா

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி எல்டிஎன்

ப.கந்தசாமி said...

நல்ல விமரிசனம்.

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கந்தசாமி அய்யா

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஐயா, வணக்கம்.

இன்று தான் என்னுடைய அறிமுகப்பதிவுக்கு தாங்கள் அளித்த பின்னூட்டத்தைப்பார்த்தேன். மிக்க நன்றி.


இந்த தங்கள் பதிவு நன்றாக இருந்தது. வலையுலகப் படைப்பாளிகளை வெளி உலகத்திற்கு அறியச் செய்தததிற்கு, நன்றி!!

நிறைய பத்திரிகைகளுக்கு சிறுகதை எழுதினேன். பெரும்பாலும் வெளியிடப்பட்டன. இருப்பினும் நிறைய EDIT செய்துவிடுகிறார்கள்.
இப்போது பத்திரிகைகளுக்கு எழுதுவதை குறைத்துக்கொண்டு விட்டேன். வலைப்பூவில் மட்டும் எழுத ஆரம்பித்து விட்டேன்.

ஒருவித ஆத்ம திருப்திக்காக மட்டுமே எழுதி வருகிறேன்.

அன்புடன்,
வை கோபாலகிருஷ்ணன்

cheena (சீனா) said...

அன்பின் கோபால கிருஷ்ணன் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Unknown said...

அன்பு நண்பரே!
வலையுலகத்தை,நன்கு
ஆய்வு செய்து எழுதியுள்ள பதிவு
அருமையாக உள்ளது
நன்றி!
புலவர் சா இராமாநுசம்

cheena (சீனா) said...

அன்பின் இராமானுசம் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

இராஜராஜேஸ்வரி said...

பகிர்வுக்கு நன்றி ஐயா

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இராஜ இராஜேஸ்வரி

இராஜராஜேஸ்வரி said...

ஒட்டு மொத்தமாகக் கூறுவதென்றால் வலைப்பூக்கள் ஊடகங்களின் முழுச் சுதந்திரம் கொண்ட நவீன பரிமானங்களாக உருவெடுத்திருக்கின்றன./

அருமையான பரிமாணத்தை உணர்த்திய பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

சீனுவாசன்.கு said...

நம்ம சைட்டுக்கு வாங்க!
தளத்துல இணைச்சுகிடுங்க!
உங்க கருத்த சொல்லுங்க!
நல்லா பழகுவோம்!...

அம்பாளடியாள் said...

மிக அருமையாக உங்கள் எண்ணக் கருத்தை வெளியிட்டுள்ளீர்கள் .வாழ்த்துக்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு .

சி.பி.செந்தில்குமார் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

cheena (சீனா) said...

அன்பின் சீனுவாசன் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - பழகுவதில் ஆட்சேபனை இல்லை - இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் அம்பாளடியாள் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் செந்தில் குமார் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

ஸாதிகா said...

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.

இராஜராஜேஸ்வரி said...

வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களிடம் விருது பெற்றதற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.. பாராட்டுக்கள் ஐயா..