Thursday, January 15, 2009

உழவர் திருநாள் நல்வாழ்த்துகள்

நுகர்ந்தால் இன்பம் நுகர்ந்தால்
வருவது மகிழ்வு !
பயின்றால் மறை பயின்றால்
வருவது பண்பு !
கனிந்தால் மனம் கனிந்தால்
வருவது அன்பு !
கொடுத்தால் பொருள் கொடுத்தால்
வருவது உறவு !
பொறுத்தால் பிழை பொறுத்தால்
வருவது நட்பு !
உணர்ந்தால் துன்பம் உணர்ந்தால்
வருவது தெளிவு !
வேர்த்தால் உடல் வேர்த்தால்
வருவது பொலிவு !
கோர்த்தால் கை கோர்த்தால்
வருவது உயர்வு !
அகழ்ந்தால் நிலம் அகழ்ந்தால்
வருவது ஊற்று !
திறந்தால் வாசல் திறந்தால்
வருவது காற்று !
அறிந்தால் உனை அறிந்தால்
வருவது ஞானம் !
உதவினால் பகட்டின்றி உதவினால்
வருவது தெய்வம் !
--------------------------------------------
அனைவருக்கும் இனிய உழவர் திருநாள் நல்வாழ்த்தாக எனதருமை நண்பர் ராஜூ எழுதி அனுப்பிய வாழ்த்து மடல்
-------------------------------------------

நலம் சேர வாழ்த்துவது
நட்புடன் ..... சீனா
----------------------

1 comment:

cheena (சீனா) said...

நண்பர்களே - கருத்துக் கூறுங்கள்