கவிதைக்குள் சொல்லைப் பார்ப்பவன் மனிதன்
சொல்லுக்குள் கவிதை பார்ப்பவன் கவிஞன்
நீ விளைத்த பழங்கள் நீ உண்ணமாட்டாய்
நீ உண்ணும் பழங்கள் நீ விளைவித்திருக்க மாட்டாய்
---------------------------------------------------------------------------------
புகாரி தன் சொந்த ஊரான தஞ்சை மாநகரம் பற்றி :
வானூறி மழை பொழியும்
வயலூறிக் கதிர் விளையும்
தேனூறி பூவசையும்
தினம்பாடி வண்டாடும்
காலூறி அழகுநதி
கவிபாடிக் கரையேறும்
பாலூறி நிலம் கூடப்
பசியாறும் தஞ்சாவூர்.
---------------------------------------------------------------------------------
6 comments:
// கவிதைக்குள் சொல்லைப் பார்ப்பவன் மனிதன்
சொல்லுக்குள் கவிதை பார்ப்பவன் கவிஞன//
அந்த ரெண்டையுமே ரசிப்பவன் இந்த ரசிகன்.ஹாஹா.. நல்லாயிருக்கு..புகாரியின் கவிதைகள்
நன்றி ரசிகரே !! வருகைக்கும் கருத்துக்கும்
கவிஞர் புகாரியின் வலைத்தளம் பார்த்திருக்கீங்களா? அன்புடன் பக்கமும் வாங்க.
சேதுக்கரசி - தகவலுக்கு நன்றி - அன்புடன் - புகாரியின் வலைத்தளம் மேலோட்டமாகப் பார்த்திருக்கிறேன். இன்னும் ஆழமாகப் பார்க்க வேண்டும். செய்கிறேன்.
மங்களூர் சிவா, இராமநாதன் வலைப்பூக்களில் உங்க பின்னூட்டத்தைப் பார்த்துதான் வந்தேன். உங்க மற்றுமொரு வலைப்பூவையும் பார்க்கிறேன்.
நன்றி சேதுக்கரசி - மெதுவாகப் பாருங்கள் - கருத்த்க் கூறுங்கள்
Post a Comment