Friday, October 12, 2007

கவிஞர் புகாரி





இதயம் மீறும் எண்ணங்களால்
நாம் எழுந்து பறப்போமே
இதய நிழலில் இதயம் கிடத்தி
இன்னல் துறப்போமே

வெளிச்ச அழைப்புகள் என்ற பதிவின் ஆரம்ப வரிகள் இவை.

கவிஞர் புகாரியின் கைவண்ணம்.

நான் ரசித்த வரிகள்
-----------------------------------------------------------------------

சுனாமி பற்றிய கவிஞரின் கவிதையில் :

படுத்துக்கிடக்கும்போதேபயமாய் இருக்கும் கடல்,
எழுந்து நின்றால் என்னாவது !!

கடலை இவ்வளவு அருமையாக வர்ணித்தது யாருமில்லை.
--------------------------------------------------------------------------

எழுத்தாளர் முத்துலிங்கம் - கவிஞர் புகாரியைச் சிறப்பிக்கும் ஒரு இலக்கிய விழாவில் - கவிஞரைப் பற்றிப் பேசியது :

"நான் கருவான முதல் இரவு என் முதலிரவு இல்லையாம்",

"சுவர்களல்ல, அறைகளல்ல வசிப்போரின் கூட்டுயிரே வீடு",

"வருவோரும் போவோரும், கண்ணே இருப்போரின் தொடர்தானே"



போன்று கவிஞர் புகாரியின் கவிதைகள் முழுக்க தத்துவ வரிகளுக்குக் குறைவில்லை. தீவிரம் குன்றாத இவருடைய படிமங்கள் மனதிலிருந்து இலகுவில் மறைவதில்லை.

ஓர் அனாதைக் குழந்தையை அவர் வர்ணிக்கிறார், பாருங்கள்.

'வேரொழிந்த பூங்கொடியோ, கண்ணே விரலெறிந்த நகச் சிமிழோ'

இன்னும் சில இடங்களில் கவிஞரின் வார்த்தைகள் சிறு காற்றில் சலசலத்து ஓடும் சிற்றோடைபோல இனிமையாகக் காதிலே வந்து விழுகின்றன. இப்படி நுட்பமான வெளிப்பாடுகள், உணர்ச்சி விளிம்புகளில் உறையும் கவிஞர்களுக்கு எப்போதோ ஓர் அபூர்வமான தருணத்தில் மட்டுமே கிட்டுபவை.

பச்சைமிளகாய் இளவரசி என்ற கவிதையில்,


"மாலை கவிழ்ந்தால் தளிர் மடியில் என் மனதின் கிழிசல் தைக்கின்றேன்"
என்கிறார்.

மகளுடைய சுரீர் கோபத்தைச் சொல்லும்போது

'நாக்கின் நுனியோரம் பொன் ஊசி உறைப்பு' என்கிறார்.

இத்தனையும் கவிஞர் புகாரியின் கவிதைகள்
---------------------------------------------------------

2 comments:

செல்விஷங்கர் said...

நான் கருவான முதலிரவு என் முதலிரவு இல்லையாம் - அடடா - என்ன அருமையான வரிகள்

சேதுக்கரசி said...

கவிஞர் புகாரியின் வலைத்தளம் பார்த்திருக்கீங்களா? அன்புடன் பக்கமும் வாங்க.