மரத்தடி குழுமத்தில் சுரேஷ் கண்ணன் என்பவர் எழுதிய - ஒரு கொரிய திரைப்படத்தின் விமர்சனத்திலிருந்து சில வரிகள் :
--------------------------------------------------------------
என்னதான் நாம் அஹிம்சை, கருணை என்றெல்லாம் தியரிட்டிக்கலாக பேசி சிலாகித்துக்கொண்டாலும் வன்முறை என்பது நம் ரத்தத்திலிலேயே ஊறிப்போன இயற்கையானதொரு அம்சம்.
வெள்ளைப் பேண்ட்டில் சேற்றுச் சக்கரத்தை இடித்து கறையை ஏற்படுத்தும் பைக்ஓட்டுநரை "குழந்தாய்.. கவனமாக செல்லக்கூடாதா?" என்றெல்லாம் நாம் கேட்பதில்லை. "த்தா.... கண்ணு என்னா பின்னாலயே இருக்கு?" என்று ஆரம்பித்து ஏக வசனகலாட்டாவில் முடியும். எதிராளியின் ஆகிருதியைப் பொறுத்து வசவின் அடர்த்தி கூடியோ குறைந்தோ, அல்லது அடிதடியிலோ வெற்று வசனங்களிலோ முடியக்கூடும். 'நான்அப்படியெல்லாம் இல்லை' என்று விவாதிப்போர் கடவுளால் பிரத்யேகமாகஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.
ஒரு ஆணின் உயிரணுக்கள் பெண்ணின் கருப்பையினுள் வேகமாகபயணம் செய்யும் போது முந்துகின்ற ஓர் அணுவுக்குத்தான் வாசலை முட்டி மோதிஉட்புகுகிற வாய்ப்பு கிடைக்கிறது. அங்கேயே ஆரம்பிக்கின்ற வன்முறையும்போட்டியும் நம் வாழ்நாளின் இறுதி வரை தொடர்வதாக நான் கருதுகிறேன்.
------------------------
Friday, November 23, 2007
நாம் இயற்கையிலேயே வன்முறையாளர்களா ?
Posted by
cheena (சீனா)
at
2:13 PM
23
comments
Labels: சுரேஷ் கண்ணன் - மரத்தடி
Friday, October 26, 2007
கவியரசின் கண்ணன் பாட்டு
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)
பன்னீர் மலர் சொரியும் மேகங்களே
எங்கள் பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே
தென் கோடி தென்றல் தரும் ராகங்களே
எங்கள் ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே
எங்கள் ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)
குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன்
ஒரு கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திரு வேங்கடத்தில் அவன் அருள்கின்றவன்
அந்த ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
அந்த ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
(புல்லாங்குழல்)
பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான்
அந்த பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான்
நாம்படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்
நாம்படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்
(புல்லாங்குழல்)
Posted by
cheena (சீனா)
at
9:43 AM
12
comments
Labels: திரைப் பாடல்
Sunday, October 21, 2007
புகாரியின் எழுத்துகள்
வானூறி மழை பொழியும்
Posted by
cheena (சீனா)
at
11:46 AM
6
comments
Labels: கவிதை
Monday, October 15, 2007
தூரன் குணாவின் கவிதை - கணையாழி 2003
பூத்திருந்த காலம்
அன்றைய அந்திப்பொழுது
Posted by
cheena (சீனா)
at
8:57 AM
8
comments
Labels: கவிதை
Friday, October 12, 2007
கவிஞர் புகாரி
இதயம் மீறும் எண்ணங்களால்
நாம் எழுந்து பறப்போமே
இதய நிழலில் இதயம் கிடத்தி
இன்னல் துறப்போமே
வெளிச்ச அழைப்புகள் என்ற பதிவின் ஆரம்ப வரிகள் இவை.
கவிஞர் புகாரியின் கைவண்ணம்.
நான் ரசித்த வரிகள்
-----------------------------------------------------------------------
சுனாமி பற்றிய கவிஞரின் கவிதையில் :
படுத்துக்கிடக்கும்போதேபயமாய் இருக்கும் கடல்,
எழுந்து நின்றால் என்னாவது !!
கடலை இவ்வளவு அருமையாக வர்ணித்தது யாருமில்லை.
--------------------------------------------------------------------------
எழுத்தாளர் முத்துலிங்கம் - கவிஞர் புகாரியைச் சிறப்பிக்கும் ஒரு இலக்கிய விழாவில் - கவிஞரைப் பற்றிப் பேசியது :
"நான் கருவான முதல் இரவு என் முதலிரவு இல்லையாம்",
"சுவர்களல்ல, அறைகளல்ல வசிப்போரின் கூட்டுயிரே வீடு",
"வருவோரும் போவோரும், கண்ணே இருப்போரின் தொடர்தானே"
ஓர் அனாதைக் குழந்தையை அவர் வர்ணிக்கிறார், பாருங்கள்.
'வேரொழிந்த பூங்கொடியோ, கண்ணே விரலெறிந்த நகச் சிமிழோ'
இன்னும் சில இடங்களில் கவிஞரின் வார்த்தைகள் சிறு காற்றில் சலசலத்து ஓடும் சிற்றோடைபோல இனிமையாகக் காதிலே வந்து விழுகின்றன. இப்படி நுட்பமான வெளிப்பாடுகள், உணர்ச்சி விளிம்புகளில் உறையும் கவிஞர்களுக்கு எப்போதோ ஓர் அபூர்வமான தருணத்தில் மட்டுமே கிட்டுபவை.
பச்சைமிளகாய் இளவரசி என்ற கவிதையில்,
மகளுடைய சுரீர் கோபத்தைச் சொல்லும்போது
'நாக்கின் நுனியோரம் பொன் ஊசி உறைப்பு' என்கிறார்.
இத்தனையும் கவிஞர் புகாரியின் கவிதைகள்
---------------------------------------------------------
Posted by
cheena (சீனா)
at
5:20 PM
2
comments
Labels: கவிதை
Wednesday, October 10, 2007
கவியரசின் அனுபவக் கவிதை
Posted by
cheena (சீனா)
at
5:26 PM
13
comments
Labels: கவிதை
அறிமுகம்
வலையுலக நண்பர்களே !
தினந்தோறும் பல புத்தகங்கள், செய்தித்தாள்கள், சுவரொட்டிகள், விளம்பரங்கள், துண்டுப் பிரசுரங்கள் எனப் பலவற்றைப் படிக்கிறோம். அவற்றில் சில வரிகள் - சில சொற்கள் - சில தொடர்கள் மனதில் சட்டெனப் பதிகின்றன. அவற்றை எல்லாம் இங்கு எழுதி வைக்கலாம் என ஒரு எண்ணம். தொடங்குகிறேன்.
Posted by
cheena (சீனா)
at
5:19 PM
14
comments
Labels: அறிமுகம்