தஞ்சாவூர்க் கவிராயர் என்றொரு தனிச்சுற்றுக்கான காலாண்டிதழில் வெளி வந்த இரு கவிதைகள்.
பிள்ளையார் சுழி :
-------------------------
ஆற்றங்கரைப்
பிள்ளையாருக்கு
கிராமத்துப்
பெண்டுகள் மீது
கோபமோ கோபம்.
என்னை
வணங்காவிட்டாலும்
பரவாயில்லை
ஒரு ஆண்பிள்ளையாய்
நடத்தக்கூடாதா ?
குளித்துவிட்டு வந்து
ஈரப்புடவையை
என்பக்கம் திரும்பி நின்றா
மாற்றிக் கொள்வார்கள்.
சீச்சீ !
எச்சம் :
----------
சிலைகள் தோறும்
காக்கையின் எச்சம்.
வள்ளுவர் சொன்னது
சரி.
தக்கார் தகவிலர் என்பது
அவரவர்
எச்சத்தாற்
காணப்படும் !
நன்றி : தினமணி - தமிழ் மணி - 12.10.2008
Sunday, October 12, 2008
பிள்ளையார் சுழி
Posted by
cheena (சீனா)
at
12:30 AM
7
comments
Labels: கவிதை, தஞ்சாவூர்க்கவிராயர், தினமணி
Subscribe to:
Posts (Atom)